tamilnadu

மோசடி வழக்கில் பாஜக பிரமுகருக்கு 3 நாள் போலீஸ் காவல்!

சென்னை, டிச.27 - நடிகை கவுதமியின் நில மோசடி  செய்த வழக்கில் கைதாகி சிறையில்  அடைக்கப்பட்டுள்ள பாஜக பிரமுகர் அழகப்பனை விசாரிக்க போலீசாருக்கு 3 நாட்கள் அவகாசம் அளித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அழகப்பனும், அவரது குடும்பத் தினரும் தனது சொத்துக்களை மோசடி செய்து அபகரித்துள்ளனர்  என்று நடிகை கவுதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

தனது சொத்து ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்து பார்த்தபோது அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து சொத்துக்களை மீட்க முயற் சித்ததாகவும் ஆனால் அரசியல் பலம் மற்றும் அதிகார பலம், காவல் துறை அதிகாரிகள் வைத்து மிரட்டி சொத்துக்களை மீட்க முடியாதபடி செய்துள்ளதாகவும் தனது புகாரில் கவுதமி தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அழகப்பன் வீட்டின் 9 அறைகளுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். மேலும், கவுதமிக்கு சொந்தமான ரூ.25  கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த அழகப்பன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மோசடிக்கு உடந்தையாக  இருந்தவர்களை பிடிப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு சார்பில் 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டு, அழகப்பன் அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ் குமார்  உட்பட 6 பேரை கேரளாவின் திருச் சூரில் கைது செய்தனர்.

இந்நிலையில், பாஜக பிரமுகரு மான அழகப்பனிடம் விசாரிக்க 3 நாட்கள் போலீஸ் காவல் கோரி  எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸ் காவலுக்கு அனு மதி அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.