tamilnadu

img

வடமாநிலங்களில் கூட பாஜக வெற்றிபெற முடியாத நிலை

சென்னை, மார்ச் 24- வடமாநிலங்களில் கூட பாஜக வெற்றிபெறமுடியாத நிலை உரு வாகிவிட்டதாக திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். வட சென்னை மக்களவைத் தேர்த லில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி போட்டி யிடுகிறார். இதையொட்டி சென்னை வடக்கு மாவட்டம், ராயபுரம் தொகுதி யில் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட பொறுப் பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. தலை மையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், பிரதமர் மோடி நான்காம் தர பேச்சாளரை விட கீழே இறங்கி பேசக்கூடிய நிலைக்கு வந்து விட்டார். பொய்யை தவிர வேறு எதுவும் பேசுவதில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார். திமுக இந்துக்களுக்கு விரோதி என்று பேசுகிறார்கள். ஆனால் இந்துக்களை காப்பாற்றும் உண்மை யான இயக்கம் திமுக தான். தமிழ் நாட்டில் எங்கெல்லாம் இந்து கோயி ல்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி பெற்றது திமுகதான்.

மதச் சார்பற்ற கொள்கையில் உறுதியோடு இருப்பது இந்தியா கூட்டணி கட்சி கள்தான். மோடி 4 முறை தமிழ்நாடு வந்துள்ளார். மீண்டும் நான்கு முறை வருவார். மோடி கண்ணுக்கு தமிழ் நாடுதான் இந்தியா போல் தெரிகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்க ளுக்கு உரிமைத் தொகை வழங்கி யதன் மூலம் வங்கிக்கு செல்லாத பெண்கள் கூட இன்று வங்கிக்கு செல்கி றார்கள். வட மாநிலங்களில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்டினாலும் அங்குள்ள மக்கள் இன்று தெளிவாகி விட்டார்கள்.

20 அல்லது 30  தொகுதிகளுக்கு மேல்வெற்றிபெற முடியாது. பீகாரில் 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறு வார்கள். குஜராத்தில் ஆம் ஆத்மி,  காங்கிரஸ் வாக்குகளை சேர்ந் தால் அங்கேயும் பாஜக படுதோல்வி  அடையும் நிலை உள்ளது. மகாராஷ் டிராவில் அமலாக்கத்துறையை வைத்து சரத் பவார் குடும்பத்தை பிரித் தார்கள். சிவசேனாவை பிரித்து விட்டார்கள். அங்கும் வாக்குகளை பெற முடியாது என்றார். தமிழ்நாட்டில், கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

நாடு முழுவதும் இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று அவர் கூறினார். இதில் திமுக தொகுதி பொறுப் பாளர் நவின்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எல்.சுந்தரராஜன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், சிபிஐ மாவட்டச் செயலாளர் கு.வேம்புலி வெங்கடேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், விசிக மாவட்டச் செயலாளர் சி.சவுந்தர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் சம்சுதின், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ராயபுரம் அலி, ஆம் ஆத்மி கட்சி மாவட்டச் செயலாளர் முகமது பாரூக், தமிழ் மாநில தேசிய லீக் மாவட்டத் தலைவர் கே.அல்லாபகஷ், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் மாறன் ஆகியோரும் பேசினர்.

இதில் ராயபுரம் சட்டமன்ற உறுப் பினர் ஐட்ரீம் மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளைய அருணா, சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, மாமன்ற உறுப்பினர்கள் வி.விஜயலட்சுமி, ஆர்.சுரேஷ்குமார், கீதா சுரேஷ், பா.வேளாங்கண்ணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.