tamilnadu

img

தோல்வி உறுதி என்பதால் தலை தெறித்து ஓடும் பாஜக வேட்பாளர்கள்!

சென்னை, மார்ச் 27 - பாஜக அணி படுதோல்வி அடையும் என்றும் தோல்வி உறுதி என்பதால் பாஜக வேட்பாளர்கள் தெறித்து ஓடு வதாகவும் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார். இந்தியா கூட்டணி சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு களப்பணியாற்றுவது குறித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச் சேரி பகுதிக்குழு சார்பில் செவ்வா யன்று (மார்ச் 26) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய தாவது: ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் பாஜக கூட்டணி உடைந்துவிட்டது. மகா ராஷ்டிராவில் கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. 3 வடகிழக்கு மாநிலங்களில் போட்டியிடவில்லை என்று பாஜக அறிவித்துள்ளது. பாஜக ஆட்சி செய்யும் குஜராத், உத்தரபிரதேச மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பலர் போட்டியிட மறுத்துவிட்டனர். 2 ஒன்றிய அமைச்சர் கள் பதவி விலகி உள்ளனர். தோல் வியை முன்கூட்டியே கணித்து விட்டனர்.

இந்த நிலையில், 400 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது திசைதிருப்பும் வேலை. தமிழகத்தில் படுதோல்வி காத்திருக்கிறது;மேலும் ஒருதொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது. எனவேதான், பலரையும் பலிகடாவாக்கி தேர்தலில் நிற்க வைத்துள்ளனர். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. ஏராள மான கட்சிகள், அமைப்புகள் இந்த அணியை ஆதரிக்கின்றன. தற்போது எதிரணிகள் உடைந்து கிடக்கின்றன. எதிரணியின் பலம் குறைந்து வருகிறது.

தென்சென்னையில் கடந்த தேர்த லில் 2.62 லட்சம் வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெற்றோம். அதை இரட்டிப்பாக்குவோம். 100 விழுக்காடு உண்மையாக, நேர்மையாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைந்து செயலாற்றுவோம். தோழமையோடு பணியாற்றும் பாசிச பாஜக-வை வீழ்த்து வோம். தமிழர், தமிழ்மொழி, ஜனநாயகத்திற்கு எதிரான இரண்டு கூட்டணிகளையும் டெபாசிட் இழக்கச் செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார். வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.வனஜகுமாரி, ச.லெனின், திமுக மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், பொருளாளர் எஸ்.பாஸ்கர் எம்.சி., தொகுதி பொறுப் பாளர் பழ.செல்வகுமார், வேளச்சேரி பகுதிச் செயலாளர்கள் சு.சேகர், துரை கபிலன், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பி னர்கள் எஸ்.ராஜேந்திரன், என்.குமரன் உள்ளிட்டோர் பேசினர்.