tamilnadu

img

12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

சென்னை:
சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.திருச்சி, கோவை, ராணிப்பேட்டை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பணி தொடங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் கூடுதலாக 8 மையங்கள் அமைக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் 11 மையங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 மையங்களிலும் பணி நடைபெறுகிறது.விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இடையே தனிநபர் இடைவெளி கடைபிடிக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.  உடல் வெப்ப அளவை பதிவு செய்ய தெர்மல் ஸ்கிரினிங் செய்யப் படுகிறது. முகக்கவசங்கள் வழங்கப்பட்டு தானியங்கி சானிடைசர் வசதிகள் செய் யப்பட்டுள்ளன.

;