சென்னை, ஏப்.5- மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட் டில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரும்படி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக் கும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “வாக்குச்சாவடிகளில் 15-க்கு 15 அடி அளவில் பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும். உதவி மையம், குடிநீர், கழிப்பறை, சாய்வுத் தளம், மின் இணைப்பு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக் கான வசதிகள் செய்து தர வேண்டும். குழந் தைகளுடன் வரும் வாக்காளர்கள், பாலூட் டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கும் வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சிசிடிவி மூலம் வீடியோ பதிவு
அதேபோல் உள்துறை செயலாளர் அமுதாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “பதற்றமான வாக்குச் சாவடிகளில் அதிக அளவில் மத்திய ஆயுதப்படை காவல் படை வீரர்களை களமிறக்க வேண்டும். வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் மூலம் முழுமையாக காட்சிப் பதிவு செய்து, அதை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வாக் குச்சாவடியை சுற்றி நடக்கும் முக்கிய விஷ யங்களையும் வீடியோ பதிவு செய்ய வேண் டும். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தேர் தல் நுண்பார்வையாளர்கள் பணியமர்த்த வேண்டும்” என்றும் சத்யபிரதா சாகு கேட் டுக்கொண்டுள்ளார்.