tamilnadu

img

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
சிறு வயதிலேயே தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை
இயக்கத்தில் இணைந்து 10 வயதிலேயே மேடை பேச்சாளராக அறிமுகமானவர்
கி. வீரமணி அவர்கள். பெரியார் வகுத்திட்ட சமூக நீதி கொள்கைக்காக
பெரியாருக்கு பிறகு தொடர்ந்து போராடி வருபவர். ஏற்றுக் கொண்ட
கொள்கைக்காக தனது வாழ்க்கையில் 54 முறை சிறைபடுத்தப்பட்டார். மதவெறி
இந்துத்துவா சக்திகளை எதிர்த்த போராட்டத்தில் உறுதி குன்றாத போராளி. சிறந்த
பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை வாய்ந்தவர். நெருக்கடிகளையும்,
சோதனைகளையும் எதிர்கொண்டு சமூக நீதிக்காக உறுதியாக போராடி வரும்
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உடல் ஆரோக்கியத்தோடு
இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து சமூக நீதி பணியைத் தொடர மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 89வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்
கொள்கிறோம்.

;