சென்னை, ஆக. 12- கொரோனா காரணமாக கடந்த 4 மாதங்க ளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் திட்ட மண் பரிசோதனை செய்யும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மாதவரம் முதல் கோயம்பேடு, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் மற்றும் கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை 3 கட்டங்களாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த 3 திட்டத்துக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான வடிவமைப்புகளை இறுதி செய்துள்ளது. மாதவரம்-கோயம்பேடு மற்றும் மாத வரம்-சோழிங்கநல்லூர் திட்டப் பணி களை தொடங்குவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் கட்டமாக சுரங்கப் பாதைகள் அமைக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. மேலும் மண் பரிசோதனை யும் மேற்கொள்ளப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக மண் பரிசோதனை உள்ளிட்ட ஆரம்ப கட்டப்பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது, 2ம் கட்டப் பணிக்கான மண் பரி சோதனை நகர்ப்புற பகுதியில் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதேபோல கட்டு மான பணிகளை தொடங்குவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.