tamilnadu

img

சமூக சேவை,தனித்திறமை மகளிருக்கு விருதுகள்

சமூக சேவை,தனித்திறமை மகளிருக்கு விருதுகள்

சென்னை, ஜூன்21- 
சமூக சேவையும், தனித்திறமையும் ஒருங்கிணைத்து சிறப்பான பங்களிப்பு செய்த பெண்களுக்கு சென்னை ரோட்டரி சங்கத்தினர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்நாடிக் என்னும் சங்கம் 2015 ஆம் ஆண்டு முதல், தொழில், பொழுதுபோக்கு, சமூக சேவை, பாதுகாப்பு, அரசுப் பணிகள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களைப் பாராட்டும் விதத்தில், சென்னை கர்னாடிக்  எனும் விருதுகளை  ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. அவ்வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் ஜூன் 19 அன்று வழங்கப்பட்டன. இவ்வருடம் விருதுகளை வென்றவர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  விருதுகளை மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எல்.விஜயகுமாரி, ஆடை வடிவமைப்பு நிபுணர்  ஸ்ரீமதி மோகன், விலக்கு ஆர்வலர் கீர்த்தனா ராம்சுகேஷ்,  நாட்டுப்புற பாடகி  அனிதா குப்புசாமி டாக்டர் சுரேகா ராமச்சந்திரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர், புவனா ரமேஷ், முன்னாள் தலைவர்கர் விருதுகளை வழங்கினர்.