tamilnadu

அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விருதுகள்

சென்னை, ஆக. 26 சென்னையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான ‘யூ ஆர்  லவுட்’  மற்றும் “அம்மா கல்வி யகம்’, கோவையில் உள்ள கே.பி.ஆர். இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியுடன் இணைந்து, 4-ஆவது ஆண்டாக  ‘புரட்சியாளர் விருதுகளை வழங்க உள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே இருந்து, இந்த விருதுக்கான வர்களை தேர்வு செய்துள்ள னர். நடப்பு ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வரும் 31 ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ளது. அதில் உள்ளாட்சித் துறை அமைச்சர்  எஸ்.பி.வேலு மணி இந்த விருதுகளை வழங்குகிறார். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்கள், சிறந்த ஆசிரியர்கள், குழந்தைகளுக்காக தன்னலமின்றி பணியாற்றும் பெற்றோர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு இந்த விருதுகள் வழங்கப்படு வதாக ‘யூ ஆர் லவுட்’ தன்னார்வ தொண்டு நிறு வனத்தின் செயல் இயக்கு னர் டேனியல் ஜேக்கப் தெரி வித்தார்.