tamilnadu

img

சிறந்த சிறார் இலக்கிய விருது பெற்ற யெஸ்.பாலபாரதிக்கு சிபிஎம் வாழ்த்து....

சென்னை:
தமிழில் சிறந்த சிறார் இலக்கியத்திற்கான விருது பெற்றுள்ள எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திவருமாறு:

தமிழில் சிறந்த சிறார் இலக்கியத்திற்கான `பால சாகித்ய புரஸ்கார் விருது’ பெற்றுள்ள எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.2020 ஆம் ஆண்டுக்கான விருதுபாலபாரதி எழுதியுள்ள `மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ எனும் நூலுக்குவழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் சித்ரவதை தொடர்பாக எழுதப்பட்டுள்ள இந்த நூல் விருதுக்கு தகுதியானதாகும்.தமுஎகச அமைப்புடன் நெருங் கிய தொடர்பு கொண்ட யெஸ்.பாலபாரதி ஊடகவியலாளராகவும் திகழ்ந்து வருகிறார். அவருடைய படைப்புத்திறன் மென்மேலும் வளரவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

;