47வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3 புதனன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் துவங்கியது. துவக்க விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதை மூத்த பத்திரிகையாளரும் தமுஎகச மாநில துணைத்தலைவரும் மயிலை பாலுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.