சென்னை, டிச. 5 - தலைநகர் சென்னையைப் புரட்டிப்போட்ட ‘மிக்ஜம்’ புயல், செவ்வாயன்று பிற்பகல் தீவிர புயலாகவே ஆந்திர மாநிலம் பாபட்லா - ஓங்கோல் இடையே அருகே கரையைக் கடந்தது.
தீவிரப் புயலான மிக்ஜம்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஞாயி ற்றுக்கிழமை காலை புயலாக மாறி யது. இதற்கு ‘மிக்ஜம்’ என பெய ரிடப்பட்டிருந்த நிலையில், இந்தப் புயலானது, வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப் புயலாக உரு வெடுத்தது. இதனால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
47 ஆண்டுகளில் இல்லாத மழை
குறிப்பாக, சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் மற்றும் செங்கல் பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயி றன்று இரவு தொடங்கி திங்களன்று இரவு வரை, கடந்த 47 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித் தீர்த்தது. 45 மணி நேரத்தில் 47 செ.மீ. அளவிற்கு மழை பதிவானது. 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக காட்டுப்பாக்கம் - 29 செ.மீ., நுங்கம்பாக்கம் - 24 செ.மீ., மீனம்பாக்கம் - 19 செ.மீ. மழை பெய்தது.
சென்னை மூழ்கியது
இதனால் சென்னையின் அனைத்துப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்பு களுக்குள் வெள்ளம் புகுந்ததுடன், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வானகங்களும் கூட வெள்ள த்தில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நக ரமே இருளில் மூழ்கியது. மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைக் கூட பெற முடியா மல் அவதிக்கு உள்ளாகினர்.
செவ்வாயன்று மழை குறைந்த நிலையில், மீட்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன. முன்னதாக, செவ்வாயன்று காலை மழை பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பேரிடர் கால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்.
களத்தில் 14 அமைச்சர்கள்
2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் என்பது செம்பரம் பாக்கத்திலிருந்து திட்டமிடப்படா மல் திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஏற்பட்டது. அது ஒரு செயற்கை வெள்ளம். ஆனால், இம்முறை சென்னை எதிர்கொண் டது இயற்கை வெள்ளம். இந்த அரசு செம்பரம்பாக்கம் ஏரியி லிருந்து திட்டமிடலுடன் முன்கூட்டியே தண்ணீரைத் திறந்து விட்டதால் இந்த பெருமழையை சமா ளித்திருக்கிறோம். 2015-ஆம் ஆண்டு மழையின்போது 119 பேர் பலியான நிலையில் இம்முறை அதிகம் மழை பெய்தும் ஏழு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தற்போது பல பகுதிகளில் இயல்பு நிலை மீண்டும் தொடங்கி யிருக்கிறது. 14 அமைச்சர்கள் களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
வரலாறு காணாத மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகள் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் ரூ. 5000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டி ஒன்றிய அரசுக்கு இன்று கடிதம் எழுத இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களும் இதைப் பேச இருக்கிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கரையைக் கடந்த மிக்ஜம்
இதனிடையே, சென்னையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜம் புயல் ஆந்திராவின் பாபட்லா அருகே செவ்வாயன்று பகல் 12.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிக்குள் தீவிர புயலாகக் கரை யைக் கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. மிக்ஜம் புயல் கரையைக் கடந்த நிலையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சூறைக் காற்று வீசியது. பாபட்லா பகுதியில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும், வலுவிழந்த நிலையில் இருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்து கடும் சேதம் ஏற்பட்டது. புயலால் உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் உடனடியாக தெரிய வரவில்லை.