சென்னை, ஜன. 4 - 46ஆவது சென்னை புத்தகக் காட்சி வெள்ளியன்று (ஜன.6) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த புத்தகக்காட்சியில் நாடகவியலாளர் பிரளயன், எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் ஆகியோருக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்குகிறார்.
முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர்: தேவிபாரதி (நாவல்), சந்திராதங்கராஜ் (சிறுகதைகள்), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பேரா.பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை/ஆய்வு)
பபாசி விருது பெறுவோர்:
சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது - முனைவர் மோ. பாட்டழகன், சிறந்த நூலகருக்கான விருது - முனைவர் க. இரத்தினசபாபதி, சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது - தீபக் மதியழகன் (லியோ புக் டிஸ்டிரிபியூட்டர்ஸ்), சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது - தேவி நாச்சியப்பன், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது - முனைவர் ச. திருஞானசம்பந்தம், சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்ச வேணி பெரியண்ணன் விருது - எழுத்தாளர் இந்துமதி, சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது - ஆயிஷா இரா. நடராசன், முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது - பாடலாசிரியர் விவேக், சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது - எழுத்தாளர் மெர்வின் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் தெரிவித்தனர்.