சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ஜாமீன் கோரி அவரது தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட் டது. சிறப்பு நீதிமன்ற நீதி பதியின் உத்தரவைத் தொடர்ந்து, சென்னை முதன்மை செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு ஆகஸ்ட் 30 புதனன்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந் தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதி மன்றமே விசாரிக்கும் என நீதிபதி அல்லி தெரி வித்திருந்தார். இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் சிறப்பு நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அம லாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமீன் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடுமாறு செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் அறி வுறுத்தியது. உயர்நீதிமன்ற உத்தரவு இல்லா மல் தன்னால் விசாரிக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள் ளதா? என்பது குறித்து முடிவெடுக்கவும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அறிவுறுத்தினார்.