சென்னை, டிச. 12 - தமிழ்நாடு அரசின் செயல்பாட்டி னால், சென்னையில் ‘மிக்ஜம்’ புயல் வெள்ளப் பாதிப்பு பெருமளவு தவிர்க்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு பாராட்டியுள்ளது.
‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென் னையில் டிசம்பர் 4, 5 தேதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 53 செ.மீ. அளவிற்கு பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்த ளித்தன. 17 பேர் வரை உயிரிழந்த னர். ஆயிரக்கணக்கான வீடுகளுக் குள் வெள்ளம் புகுந்தது. வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங் கள், தொழில் நிறுவனங்களில் இருந்த இயந்திரங்கள் சேதம் அடைந்தன.
முதல்வர் துவங்கி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளா ட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அதிகாரிகள், மீட்புப் பணிக்காக வெளிமாவட்டங்களிலிருந்து வர வழைக்கப்பட்ட ஊழியர்கள் என தீவிரமாக களத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகளை வேகமாக முன்னெடுத்தது. புயல் வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்க ளை மீட்க ஒன்றிய அரசிடம் ரூ. 5 ஆயிரத்து 60 கோடியை நிவாரண நிதியாக கேட்டு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோ டிக்கு கடிதம் எழுதினார். ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னை வந்து ஹெலி காப்டரில் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்ததுடன், முதல்வர் ஸ்டா லினுடன் ஆலோசனை நடத்திய நிலையில், வெறும் 450 கோடி ரூபா யை மட்டுமே முதற்கட்ட நிதியாக ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்தது.
எனினும், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகளிடம் நன்கொடைகளைப் பெற்று தமிழக அரசு தொடர்ந்து நிவாரணப் பணி களை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே சென்னை மழை - வெள்ளப் பாதிப்புக்களை ஆய்வு செய்வதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோ சகர் குணால் சத்யார்த்தி தலைமை யில் 6 பேர் கொண்ட மத்தியக் குழு வினர் தில்லியில் இருந்து திங்கட்கிழ மை (டிச.11) இரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இந்த குழு செவ்வாய்க்கிழமை (டிச.12) சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவை சந்தித்தது. அப்போது புயல் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியது. பின்னர் இரண்டாகப் பிரிந்து, வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வுக்கு இடையே, மத்தியக்குழுவினர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, “சென்னை மிக மோசமான முறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தின்போது அவர்கள் முடிந்த அள விற்கு மிகச் சிறப்பாக பணியாற்றி பெரும்பாதிப்பில் இருந்து சென்னை யை காப்பாற்றி உள்ளனர். அதற்காக தமிழ்நாடு அரசினை பாராட்டு கிறோம்” என்று தெரிவித்தனர். மேலும், “தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யால் சென்னையில் பாதிப்பு என்பது மிகக் குறைவாக நடைபெற்றுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்திருந் தால் பெரும் பாதிப்பினை தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கும். மழைநீர் வடிகால் கட்டமைப்பு என்பது கடந்த 2015 வெள்ளத்தின்போது இருந்ததை விடவும் மிகச் சிறப்பாக உள்ளது. அதனால்தான் சென்னை விமான நிலையம் மிக விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மின்சாரம் கூடுமானவரை விரைவில் வழங்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புச் சேவை விரைவாகவே சீர் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு அரசினை மத்திய ஆய்வுக் குழு சார்பாக பாராட்டுகின்றேன். அதே நேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நாங்கள் உறு துணையாக இருப்போம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.