tamilnadu

img

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதி நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதியை நியமித்தும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்து இரண்டு நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்தும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


 மாவட்ட நீதிபதியாக உள்ள பி.வடமலையை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  மேலும் ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதியான பட்டு தேவ்ஆனந்த், மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியான தேவராஜூ நாகார்ஜூன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இடமாற்றம் செய்தும் குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயரவுள்ளது. காலிபணியிடங்களின் எண்ணிக்கை 14 ஆக குறையவுள்ளது.

;