கடந்த அக்டோபர் மாத இறுதியில் தாங் கள் வைத்திருக்கும் ஆப்பிள் செல்போன்கள் அரசு உதவியுடன் ஹேக் மற்றும் ஒட்டுக்கேட்க உள்ள தாக அரசியல் தலைவர்க ளுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பியது.
இந்த விவகாரத்திற்கும் அரசுக்கும் எந்தவித சம்மந் தம் இல்லை எனக் கூறிய ஒன்றிய அரசு, இதுகுறித்து விளக்கம் அளிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு நோட்டிஸும் அனுப்பி விசாரணைக்கும் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஹேக்கிங் குறுஞ்செய்தி விவ காரத்தை ஆராய மற்றும் விசாரணை நடத்த அதி காரிகளை அனுப்புகிறது ஆப் பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவன விசாரணை அதி காரிகள் விரைவில் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.