சென்னை, ஜன. 4 - ஊதிய குறைப்பு ஆணையை ரத்து செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டு மென்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனிடம், கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் வலி யுறுத்தினர்.
இது தொடர்பாக அமைச்சரை சம்மேளன தலைவர் தி. தமிழரசு, பொதுச் செயலாளர் இ.சர்வேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது, மூன்று வருடங்களாக நிலுவையில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கையில் உள்ள குறைகளை விவ ரித்து, ஏற்கனவே பெற்று வரும் சலுகைகள் பறிக்கப்படுவதையும், காலத்திற்கேற்ற படி களை உயர்த்த வேண்டியதையும் எடுத்து ரைத்தனர். மேலும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கொண்ட கூட்டத்தை நடத்தக் கோரினர்.
இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் இ.சர்வேசன் கூறுகையில், “தொழிற்சங்கங்களின் ஒப்புதல் இன்றி கூட்டுறவு சங்க பதிவாளர் தன்னிச்சையாக ஊதிய உயர்வை அறிவித்துள்ளார். இதனை ஏற்க இயலாது. இதுபோன்ற நிகழ்வு களை தவிர்க்க பதிவாளர் மற்றும் தொழிற் சங்கங்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை விரைந்து நடத்த அமைச்சர் ஒப்புக் கொண்டார். இருப்பினும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.5 அன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகங்கள் முன்பு ஒரு நாள் தர்ணாவும், 10 ஆம் தேதி மாநில அளவில் சென்னையில் ஒரு நாள் தர்ணாவும், ஜன.23-24 தேதிகளில் வேலை நிறுத்தமும் நடைபெறும்” என்றார்.