tamilnadu

img

நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தாருங்கள்!

சென்னை, ஏப். 17 - நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்ட ணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித்  தருமாறு பொதுமக்களுக்கு தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின், பொதுமக்க ளுக்கும் திமுக தொண்டர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

இரண்டாவது விடுதலைப் போர்
“இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட  40 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி நடை பெற இருக்கிறது.

ஜனநாயகத்தையும், மக்களாட்சி மாண்பு களையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்து வத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ‘இந்தியா’ கூட்டணி வேட்பா ளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இருள் சூழ்ந்த மோடி ஆட்சி
கடந்த பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள் தான் - ஏப்ரல் 19. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்து விடக்கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார்.

அவரது குஜராத் மாடல் என்பது போலி யானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் கடந்த பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனை வருக்கும் தெரிவது, ‘ஊழல் மோடி’ தான்.

போலி பிம்பம் உடைந்துவிட்டது
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லா யிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்தி விட்டது. உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல்,  சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதிய ஜனதா கட்சியும், நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உரு வாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன.

தேர்தல் பத்திர நடைமுறையே முறை கேடானது, சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தை பிரதமர்  நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வரு வது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர் களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த  நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து
அம்பேத்கர் இயற்றி அளித்த அரசிய லமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்து போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங் களைச் செயல்படுத்தவிடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப்  பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை.

இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கை கள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப் பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட் ரோல், டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங் களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோச மான ஆட்சி, மோடியின் ஆட்சி.

மாநிலங்களுக்கு எதிரான கொடுங்கோல் ஆட்சி
வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர் களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது  போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடை முறைகளுக்குக்கூட உச்சநீதிமன்றத்தை நாடு வதற்கு மாநிலங்களுக்கு நிர்ப்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமை யிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவர்.

மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதை பெருமை யான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சி யாளர்களுக்கு தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது. இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்று விட்டார்.

இனியொரு வாய்ப்பு ஜனநாயகத்திற்கு ஆபத்து
எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து  அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு  தாங்காது. நாடாளுமன்றத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும். சர்வாதிகார அதிபர்  ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சியாளர்கள் இந்தியாவை மாற்றி விடுவார்கள்.

இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநி லங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றி விடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவை பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

ஒரு மாதமாக கேட்டும் பதிலில்லை
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன் னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத் தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் பாஜக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன்.

தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சி ப்பது நியாயமா? என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலை  பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்ற த்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முத லீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றி யவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள்.

வஞ்சித்த பாஜக; பாழ்படுத்திய அதிமுக
தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக் கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்ப தற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே  கூடாது. இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன் னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது.

தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ் படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணி யையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்க ளைக் கேட்டுக் கொள்கிறேன். பாஜக வுக்கும், அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தா லும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடு வார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பாஜக-வுக்குத் தேவையென்றால் நேரடி யாக ஆதரிப்பார்கள்.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத் தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

உற்சாகம் தந்த தொண்டர்களின் உழைப்பு
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை யிலான ‘இந்தியா’ கூட்டணியில்  காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந் துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங் கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்து உள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த  நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது.

கட்டுப்பட்டு பணியாற்றிய உடன்பிறப்புக்கள்

தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட  அறிக்கையில், ‘’புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு, ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்’ என்பதை  மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே  போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணி யாற்ற வேண்டும்” என்று உரிமையோடு நான்  கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணி யாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன்.

‘இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்’ என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன். இதே ஆர்வமும், சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றிக்கனி பறிக்கும்வரை கண் துஞ்சாதீர்!
ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக் கூடாது.  அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொரு ட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து  சேரும் வரை, ‘கண் துஞ்சாது, பசி நோக்காது, கருமமே கண்ணாயினர்’ என நாம் கவனத் தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும்.

தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொருவரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களி டம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திரா விட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய மகத் தான மக்கள் நலத்திட்டங்களையும், சாதனை களையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

இருண்டகாலம்  தொடர்ந்துவிடக் கூடாது
இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப் போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில் தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும், தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலுசேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங் களாக மாற வேண்டும்.

தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்க ளுக்கு பணிவான வேண்டுகோளை கரம்  கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென் றும் மதச்சார்பின்மையும், கூட்டாட்சியும், சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டு வதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயு தமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக் கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும்.

‘இந்தியா’வுக்கு 
வெற்றி தேடித் தாருங்கள்..

தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத் திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு தில்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர் காலத்திற்கு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம்.

ஜனநாயகத்தைக் காக்கும் போர்க் களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் 

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17 புதனன்று மாலை பேரெழுச்சியுடன் நிறைவு பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து நடைபெற்ற நிறைவுப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். பிரச்சார நிறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோளையும் அவர் வெளியிட்டுள்ளார். 


 

;