டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் குரூப்-2 தேர்வுகளுக்கான தேதி நாளை (பிப்.18) மாலை 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 -வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள், குரூப் 4ல் 5,255 காலிப் பணியிடங்களும் இருப்பதாக ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்திருந்தார்.
குரூப் 2 தேர்வை எழுத உள்ளோர் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் -2 கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளின் கீழ் தேர்வு செய்யப்படுகின்றனர்.