சென்னை:
தமிழகத்தில் புதிதாக 5 மாவட் டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கான தேர்தல் உட்கட்டமைப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தது.தற்போது 5 மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் குறித்த விவரங் களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழக அரசின் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங் கல்பட்டு எனவும், வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் எனவும், திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி எனவும் பிரிக்கப்பட்டன. இதனால் மாவட் டங்களின் எண்ணிக்கை 37 ஆனது.தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள் ளது. இதையொட்டி, தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங் களின் கீழ் வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளை பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மாவட்ட வாரியாக தொகுதிகள்:
1.காஞ்சிபுரம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர்(தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
2.செங்கல்பட்டு: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருபோரூர், செய்யூர், மதுராந்தகம்,
3.வேலூர்: காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கீழவைத்தியனாங் குப்பம்,(கே.வி.குப்பம்)
4.ராணிப்பேட்டை: அரக் கோணம், சோளிங்கர், ராணிப் பேட்டை, ஆற்காடு.
5.திருப்பத்தூர்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார் பேட்டை, திருப்பத்தூர்.
6.விழுப்புரம்: செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர்.
7.கள்ளக்குறிச்சி: உளுந் தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக் குறிச்சி(தனி).
8.நெல்லை: நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்.
9.தென்காசி: சங்கரன் கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம்.