சென்னை, மார்ச் 13 - போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிஐடியு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் கே. ஆறுமுக நயினார் ஆகியோர் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழக அரசு ஊழியர்கள் தற்போது 46 சதவிகிதம் அக விலைப்படி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அகில இந்திய நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில் 2024 ஜனவரி முதல் 4 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே அடிப்படையில் தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கும் 2024 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு வழங்கும்போது அதற்குரிய நிலுவைத்தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால், போக்கு வரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை 2023 ஜூலை மாதம் முதல் வழங்கப்படாமல் நிலுவை யில் உள்ளது. எனவே, போக்குவரத்து ஊழியர்களுக்கு 50 சத விகிதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவதுடன், அகவிலைப்படி நிலுவைத்தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல், போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர் களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக நடைபெற்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்ற தீர்ப்புக்கள் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பும், அகவிலைப்படி உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 90 ஆயிரம் பேருக்கு அகவிலைப்படி உயர்வு கடந்த 8 ஆண்டுகாலமாக வழங்கப்படாததுடன், ஓய்வூதியமும் முறைப்படுத்தப்படாமல் மிகக்குறைவான ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
90 ஆயிரம் ஓய்வூதியர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் 70 வயதைக் கடந்தவர்கள். வயது முதிர்ந்த காலத்தில் மிகக் குறைவான ஓய்வூதியம் பெற்று கடும் துயரங்களுக்கு உள்ளாகி யுள்ளனர். எனவே, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர் களுக்கு ஓய்வூதியத்தை முறைப்படுத்தி கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.