tamilnadu

img

ஆண்ட்ரூயூல் நிறுவன ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

சென்னை, ஆக. 19 - ஊதிய உயர்வு கோரி ஆண்ட்ரூயூல் நிறுவன ஊழியர்கள் திங்களன்று (ஆக.19) காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். மத்திய அரசுக்கு சொந்தமான ஆண்ட்ரூயூல் அண்டு கம்பெனி லிட். என்ற பொதுத்துறை நிறுவனம் கந்தஞ்சாவடியில் (பழைய மகாபலிபுரம் சாலை) செயல்பட்டு வருகிறது. இங்கு உயர்மின்னழுத்த மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்) தயாரிக்கப்படுகிறது. இத்தொழிற்சாலையில் 72 தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். இவர்க ளுக்கென்று  டிரான்ஸ்பார்மர் அண்டு சுவிட்ச்கியர் எம்பிளாயீஸ் யூனியன் (சிஐடியு) செயல்படுகிறது. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை 1-4-2017 அன்று தொடங்கியது. கடந்த 28 மாதத்தில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படவில்லை. மத்திய தொழிலாளர் நல துணை ஆணையர் ஆலோசனை களையும் நிர்வாகம் செயல்படுத்தவில்லை. எனவே, ஒப்பந்த பேச்சு வார்த்தையை விரைவாக முடித்து ஊதிய உயர்வு வழங்க கோரி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் தொடங்கி உள்ளனர். போராட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் எஸ்.அப்பனு, ஒப்பந்த பேச்சு வார்த்தையை முடிக்காமல் நிர்வாகம் காலதாமதம் செய்கிறது. உரிமைகளை கேட்கும் தொழிலாளர்களை பணிமாற்றம், தற்காலிக நீக்கம், பதவியிறக்கம் செய்து பழிவாங்குகிறது. காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தொழிலாளர்கள் மீது பணிப்பளுவை திணிக்கிறது. 25 வருட மாக பணியாற்றிய தொழி லாளிக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே நியாயமான ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடைபெறுவதாக கூறினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.கருணாகரன், பொருளாளர் டி.ரங்கநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பல்வேறு தோழமை சங்கத் தலைவர்கள் போராட்ட த்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.