tamilnadu

img

கூடுதலாக 20 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டும் கூட்டம் இல்லை....

சென்னை:
கொரோனா அச்சம் காரணமாக, அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கியும் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட பொது போக்குவரத்து படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது.கடந்த செப்டம்பர் மாதம் முதல் 60 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயக்கப் பட்டன.தற்போது கொரோனா தொற்று பரவல் தமிழகம் முழுவதும் குறைந்து விட்டதால் பேருந்து போக்குவரத்து மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

100 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என அரசு சமீபத்தில் அறிவித்தது. இதேபோல் கூடுதல் பஸ்களை இயக்கவும் அனுமதி கொடுத்துள்ளது.இதைத்தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தொடர் பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

அரசின் அறிவிப்பை தொடர்ந்து தேவைக்கு ஏற்ப பல்வேறு வழித்தடங்களில் கடந்த 2 நாட்களாக கூடுதலாக 20 சதவீத பேருந்துகளை இயக்கி வருகிறோம்.அதுபோல் இரவு 9 மணிக்கு மேல் இயக்கப்பட்ட மொத்த பேருந்துகளில் 30 சதவீதம் குறைத்து இருந்தோம். தற்போது பேருந்துகளின் சேவையை படிப்படியாக அதிகரித்து 90 சதவீத பேருந்துகளை இயக்கி வருகிறோம்.ஆனாலும் கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. குறைந்த அளவில் வருகிறார்கள். இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை வரி, சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து சில மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.