tamilnadu

வணிகர்கள் 100 சதவீதம் வாக்களிக்க ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள்

சென்னை, ஏப். 17-வணிகர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மக்களவை, மற்றும் இடைத்தேர்தலில் வணிகர்கள் 100 சதவீதம் வாக்கு பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும். நம்முடைய உரிமைகளை, இழந்து நிற்கும் பல்வேறு கோரிக்கைகளுக்கான தீர்வுகளை காணவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நாம் எடுக்கின்ற உறுதியான வாக்களிப்பின் முடிவே, நமதுஎதிர்காலத்தை நிர்ணயிக்கும்என்பதை வணிகர்கள் மறந்துவிடக் கூடாது.இக்கட்டான காலச்சூழ்நிலையில், இத்தேர்தல் நடைபெறுகின்றது. சரியான முடிவினை,சரியான தருணத்தில், சரியான வாக்களிப்பின் மூலமே நமது கோரிக்கைகளையும், வணிகர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றிட முடியும் என்பதால், வணிகர்கள் வணிக வளர்ச்சிக்கான சிந்தனை நோக்கில், தமிழகம் முழுவதும் உள்ளவணிகர்கள் ஒருங்கிணைந்து, நமது உரிமையினை நிலைநாட்டிட, வணிகர்களின் ஒருமித்த சக்தியை எடுத்துக்காட்டும் விதமாகநல்லதொரு முடிவை 100விழுக்காடு வாக்களிப்பின் மூலம் நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;