tamilnadu

img

பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வருகையையொட்டி பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும்  வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர்.இதையொட்டி  சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை வரவேற்பு பேனர்கள் வைக்க அனுமதிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 14 இடங்களில் அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேனர் வைக்க அனுமதி அளிக்கக்கூடாது என எதிர்மனுதாரர்களான திமுக மற்றும் டிராபிக் ராமசாமி சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பேனர் வைக்க அனுமதிக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்று பேனர்கள் வைக்க அனுமதி வழங்கினர். விதிகளை பின்பற்றி, மக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்களை வைக்கலாம் என கூறினர்.