வெள்ளம் மழை போன்ற இயற்கை சீற்றங்களின்போதும், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, அவசர காலங்களில் பாதிக்கப்பட்டோரை விரைந்து மருத்துவமனையில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டோரை அங்கீரிக்கும் வகையில் அலர்ட் என்ற லாபநோக்கமற்ற அமைப்பின் சார்பில் சென்னையில் ஞாயிறன்று (செப். 8) அலர்ட் பியிங் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அலர்ட் நிறுவனர் கலா பாலசுந்தரம், நிர்வாக அறங்காவலர் ராஜேஷ் ஆர்.திரிவேதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.