tamilnadu

நடிகை கவுதமியின் நிலம் மோசடி: அழகப்பன் குடும்பத்துடன் கைது

சென்னை,டிச.22- நடிகை கவுதமிக்கு சொந்தமான 8.63 ஏக்கர் நிலம், திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூர் கிரா மத்தில் இருந்தது. அந்த நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்த அவ ருக்கு, காரைக்குடியைச் சேர்ந்த அழ கப்பன் என்பவர் நிலத்தை விற்ப தற்கு உதவுவதாக கூறினார்.

இந்த நிலையில் கடந்த 2015  ஆம் ஆண்டு மும்பையில் உள்ள நிறுவனத்திற்கு நிலத்தை விற்று விட்டதாக கூறி, சுமார் ரூ.4 கோடியை கவுதமிக்கு கொடுத்துள் ளார். பிறகு, ரூ.7 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பிறகு, அழகப்பன் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அழகப்பன் குடும்பத் தோடு தலைமறைவானார். இதற் கிடையில் நில தரகர் பலராமன் (64) கைது செய்யப்பட்டார். அழகப்பன் மற்றும் ரகுநாதன் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

 மேலும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்து, அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்தனர். இந்த நிலையில், அழகப்பன் (63), அவருடைய மனைவி நாச்சியாள் (57), மகன் சிவ அழகப்பன் (32), மருமகள் ஆர்த்தி (28), டிரைவர் சதீஷ் (27) ஆகியோர் கேரள மாநி லம் திருச்சூர் அருகே உள்ள கிரா மத்தில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர்  5 பேரையும் கைது செய்த னர்.