“திருப்பூரில் நீண்ட நாட்களாக இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை அதற்கான நிலம் கையகப்படுத்தப்படவில்லை. கோடிக்கணக்கில் குதிரை பேரம் செய்து பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த பணத்தைக் கொண்டு மக்களுக்கும், தொழில் துறைக்கும் பாஜக ஏதாவது நல்லது செய்தால் நன்றாக இருக்கும். காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் இருக்கிறது என்று கூறுவதை ஏற்க முடியாது. நாற்பதுக்கும் மேற்பட்ட வாரிசுகள் பாஜகவில் பதவியில் இருக்கிறார்கள்” என்று காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.