சென்னை, மார்ச் 10- தேர்தல் களத்தில் திமுகவை களங்கப்படுத்த பாஜக முயற்சிக் கிறது, அதற்கு அதிமுகவும் துணை போகிறது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஏற்கனவே வரு மான வரித்துறை, அமலாக்கத் துறையை இறக்கிவிட்ட பாஜக தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவை ஏவிவிட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர் பான புகார் எழுந்தவுடனே ஜாஃபர் சாதிக்கை திமுகவில் இருந்து நீக்கிவிட்டோம். அவருக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழ்நாட்டில் திமுக அரசை களங்கப்படுத்தும் நோக் கோடு போதைப்பொருள் தடுப்புப் பிரிவை (NCB) பாஜக களமிறக்கி விட்டுள்ளது. பாஜகவின் அரசி யல் தமிழ்நாட்டில் எடுபடாது. ஜாஃபர் சாதிக்கை தேடப்படும் நபராக பிப்ரவரி 15-ஆம் தேதி அறிவித்ததாக என்சிபி கூறி யுள்ளது. ஆனால், பிப்ரவரி 21-ஆம் தேதி ‘மங்கை’ திரைப்படத்தின் விழாவில் அவர் கலந்துகொண் டுள்ளார். அப்போது என்சிபி எங்கே போனது?, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை யை பயன்படுத்திய பாஜக தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவையும் பயன் படுத்துகிறது. இந்தியாவில் போதை பொருள் நடமாட்டத்திற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் தான் காரணம்.
பாஜகவுடன் அதிமுகவும் கைகோர்த்து செயல்படுகிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. போதைப்பொருள் பயன் படுத்துவதை முழுமையாக தடுத்து வைத்துள்ளோம். குஜராத், மகாராஷ்டிராவில் தான் அதிக போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திமுக மீது அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.