“அதிமுக பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்காது. கூட்டணி என்று வரும்போது கூட்டணி தர்மம் வருகிறது. தேசிய அளவில் ஒரு முடிவை எடுக்கும் போது மாநிலத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், அதிமுக சுயமாக முடிவெடுத்து செயல்படுவதற்காக தேசிய கட்சியின் கூட்டணியில் இடம்பெறவில்லை” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியுள்ளார்.