tamilnadu

img

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம் தொடக்கம்

வேளாண் இயந்திரங்கள்  பராமரிப்பு முகாம் தொடக்கம்

திருவண்ணாமலை,மே25 -  திருவண்ணாமலை மாநகராட்சி ஈசான்ய மைதானத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சனிக்கிழமை திறந்து வைத்தார். இந்த முகாமில், தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, விவசாயி களால் பெருமளவு பயன் படுத்தப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரிக்கும் முறை, பழுதுகளை கண்ட றியும் முறை, உதிரிபாகங் கள், மசகு எண்ணெய் மற்றும் உயவு பொருட்கள் பயன்பாடு குறித்த தெளி வுரை ஆகியவை வேளாண் இயந்திர உரிமையாளர்க ளுக்கும். விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தும் வகையில் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.  மேலும் முகாமில் புதிய வேளாண் இயந்திரங் கள் மற்றும் கருவிகள், வேளாண்மை பொறியியல் துறையின் கரும்பு அறு வடை இயந்திரம், தேங்காய் பறிக்கும் இயந்திரம் மற்றும் நடமாடும் வேளாண் இயந்திரங்கள் பழுது பார்க்கும் வாகனம் முதலியவை காட்சிப் படுத்தப்பட்டது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளா ண்மை பொறியியல் துறை யின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 1575 விவ சாயிகளுக்கு ரூபாய் 21 .12 கோடி மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப் பட்டுள்ளன. மேலும் இம்மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 6 கரும்பு அறுவடை இயந்திரங்கள் ரூபாய் 2.65 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. இ-வாடகை செயலியின் மூலம் 1622 விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண்மைப் பொறியி யல் துறையின் இயந்தி ரங்களை பயன்படுத்தியுள்ள னர். 207 விவசாயிகளுக்கு ரூபாய் 28.61 இலட்சம் மானி யத்தில் மின் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. 30 விவசாயிகளுக்கு ரூபாய் 54 இலட்சம் மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சுமார் 15 தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், அரவிந்தர் வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திரு வண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) சண்முகநாதன், கண்காணிப்பு பொறியாளர் (வேளாண் பொறியியல்), விவசாயிகள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவ லர்கள் கலந்து