சென்னை, நவ. 24 - தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக் கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தர்மோகன் அமர்வில் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 12 அன்று 34 இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக பல மணல் குவாரிகள் செயல்பட்டு வருவ தாகவும், இதுதொடர்பாக, தமிழ் நாட்டைச் சேர்ந்த 10 ஐ.ஏ.எஸ். அதி காரிகளை விசாரணை செய்ய வேண்டும் என்றும் கூறி, அவர் களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய சம்பவம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. இது, தமிழ்நாடு அரசுக்கு எதிராக, அரசு அதிகாரிகளை மிரட்டி பணி யவைக்கும் மற்றும் அரசு நிர்வா கத்தை வேண்டுமென்றே சீர்குலை க்கும் முயற்சி என்று குற்றச்சாட்டுக் கள் எழுந்தன.
இந்நிலையில், தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 10 பேருக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியன்று வழக்குத் தொடர்ந்தது. அந்த மனுவில் “மணல் எடுக்கும் விவகாரம் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கின் கீழ் வராது; சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தில், கனிமவளச் சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதி கார வரம்பு இல்லை; மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கி லும், அரசு நிர்வாகத்துக்கு இடை யூறு ஏற்படுத்தும் நோக்கிலும், அம லாக்கத்துறை செயல்படுகிறது” என்று தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி யிருந்தது.
இந்த வழக்கை விரைந்து விசார ணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தர்மோகன் அமர்வில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நவம்பர் 27 திங்கட்கிழமையன்று வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக தெரி வித்துள்ளனர்.