குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. உழவர்கரை நகரத் தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பிரதேசத் தலைவர் ஆனந்து, செயலாளர் பி.சரவணன், மாணவர் சங்க பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் பாஸ்கர், வினோத்குமார், நிலவழகன், சுரேஷ், வின்னரசன், பிரவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
*****************
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் டி.முருகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் என்.சுப்பரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், வட்டக்குழு உறுப்பினர் அண்ணாமலை, நகரச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.