சென்னை, டிச.28 - 4 ஆண்டுகளுக்கு பின் சென்னை யில் இருந்து சவுதி அரேபியா ெஜட்டா நகருக்கு நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது.
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியாவின் ெஜட்டா நகருக்கு சவுதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின் சென்னையிலிருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப் பட்டன. ஆனால், ெஜட்டா நகருக்கு இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
இதனால் ஹஜ் பயணம் செல் வோர், உம்ரா பயணம் செல்வோர், சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு செல்வோர் என அனைவரும் இலங்கை வழியாக செல்ல வேண்டி யிருந்தது. இலங்கை வழியாக அரேபியாவிற்கு செல்ல 13 மணி நேரம் தேவைப்படுவதால் நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்குப் பின் புதன் கிழமையிலிருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் ெஜட்டா – சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்கியது. இந்த விமான சேவை வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படுகிறது. நேரடியாக விமான சேவை தொடங்கியதால் அதில் 215க்கும் மேற்பட்ட புனித உம்ரா பயணிகள் சென்றனர். அவர்களுக்கு இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர் வாழ்த்து தெரிவித்தார்.