சென்னை, மார்ச் 29- தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பொதுமக்கள், வணிகர்கள், விவசாயி கள் கடும் பாதிக்கப்படுவதாகவும், தேர்தல் நாளான ஏப்ரல் 19 வரை கடை யடைப்பு போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படும் என தமிழ்நாடு வணி கர் சங்கங்களின் பேரமைப்பு தெரி வித்துள்ளது.
இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் பூ வியாபாரிகள் முதல் மீன் வியாபாரம், வண்டியில் ஐஸ் வியா பாரம் செய்யும் மிகச்சாதாரண வணி கர்கள் கூட தேர்தல் நடத்தை விதி முறைகளை அமல்படுத்தும் அதிகாரி களின் அத்துமீறலாலும், அதிகார துஷ் பிரயோகத்தினாலும், மனிதாபி மானற்ற செயல்களாலும், இயற்கை நீதிக்கு புறம்பாகவும் செயல்படுவதால் வணிகமும், வணிகர்களும் மிகப் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
நாளிதழ்களில் வந்துள்ள செய்திகளே இதற்கு ஆதாரம். இதுபோன்ற செயல் வணிகர்களின் அடிப்படை உரிமை களை பறிப்பதாக உள்ளது. 2014இல் இருந்த நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் களின் செலவினங்கள் தற்போது இருமடங்காக உயர்த்தப்பட்டி ருக்கிறது.
அதைப்போலவே அனைத்து பொருட்களின் விலைகளும் இரட்டிப் பாக இருக்கும் சூழ்நிலையில், வணி கர்கள் எடுத்துச் செல்லும் பணத்தை மட்டும் அன்றைய தினத்தில் அறிவிக் கப்பட்ட அதே நிலையில் இன்றும் இருப்பது நியாயமற்றது, நீதிக்கு முர ணானது. கடந்த 16ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதசாகுவை சந்தித்து, தேர்தல் நடத்தை விதி முறைகளால் மிக கடுமையாக பாதிக் கப்படும் வணிகர்கள் சம்பந்தமான கோரிக்கையை அளித்தோம். மேலும் 19ஆம் தேதி புதுடெல்லி மத்திய தேர்தல் ஆணையருக்கும் இக்கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடை முறை, அமலாக்கத்திற்கு வரும் போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத் தப்படுவதும், அவதிக்குள்ளாவதும், பொருள் இழப்போடு, முதலீடு இழப்பு களையும், வணிகத்தில் தேக்கமும், மன அழுத்தமும் தொடர் கதையாக உள்ளது. தற்போது பறக்கும் படை என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விவ சாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், மருத்துவ செலவினங்கள் அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு எடுத்து செல்லப்படும் பணம் அதிகளவில் பறி முதல் செய்யப்படுகிறது.
உண்மை யாகவே தேர்தலில் கையூட்டு கொடுப் பதற்காக எடுத்துச் செல்லப்படும் பணம் இதுவரை பறி முதல் செய்யப் பட்டுள்ளதாக எந்த தகவலும் செய்தி களும் இல்லை. முரண்பாடான தேர்தல் நடத்தை விதிமுறைகளால், வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே இருக்கும். இதுசம்பந்தமாக இன்னும் இரண்டு நாட்களில் மாநில தேர்தல் ஆணை யரை மீண்டும் நேரில் சந்தித்து முறை யிட உள்ளோம். தீர்வு எட்டப்படாமல், இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தேர்தல் தேதியான ஏப்ரல் 19 வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவ தற்கான அறிவிப்பு அங்கேயே வெளி யிடப்படும் சூழல் உருவாகும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.