சென்னை, டிச.30- ஆளுநர் ஆர்.என். ரவியை, தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டும், மசோதாக் களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளு நர் ஆர்.என். ரவி பிடிவாதம் காட்டி வந் தார். மசோதாக்களுக்கு எதிராக மிகுந்த ஆணவத்துடனும் நடந்து கொண்டார்.
இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலை யில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நீதிபதி கள் கண்டனம் தெரிவித்ததுடன், “சட் டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் அளு நரே தீர்வு காண வேண்டும். இல்லை யென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். ஆளுநர் முதலமைச்சரை அழைத்து பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்” என்று தெரிவித்து இருந்தனர்.
இதனால் வேறுவழியின்றி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலினுடனான சந் திப்புக்கு அழைப்பு விடுத்தார்.
எனினும், 8 மாவட்ட மழை -வெள்ளப் பாதிப்புக்களால், உடனடியாக சந்திக்க முடியாத நிலையில், சனிக்கிழமையன்று மாலை 5.30 மணியளவில், அமைச் சர்கள் துரைமுருகன், ரகுபதி, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோ ருடன் ஆளுநர் ஆர்.என். ரவியை, முதல் வர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார். சுமார் 45 வரை நடந்த இந்த சந்திப்பில், நிலு வையிலுள்ள 21 மசோதாக்களுக்கு ஒப்பு தல் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பிறகு அமைச்சர் ரகுபதி செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “உச்ச நீதிமன்றத்தின் அறி வுறுத்தலின்படி ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்து பேசினோம். 21 மசோதாக்கள் தமிழக அரசால் நிறை வேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆளு நர் 20 மசோதாக்களை குடியரசுத் தலை வர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். ஒரு மசோதா மட்டும் ஆளுநரிடம் நிலுவை யில் உள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீர மணி மற்றும் விஜயபாஸ்கர் மீது விசா ரணை நடத்த அனுமதி கேட்டு அனுப் பப்பட்ட கோப்புகள் நிலுவையில் உள் ளன. அதற்கு அனுமதி தர கோரினோம். அத்துடன், முன்கூட்டி விடுதலை செய் வது தொடர்பாக 112 கோப்புகள் முதற் கட்டமாக ஆளுநருக்கு அனுப்பப்பட் டன. அதில் 68 பேரின் முன் விடுதலைக்கு அனுமதி அளித்து, 2 பேரின் விடுதலை யை ரத்து செய்திருக்கிறார் ஆளுநர். இன்னும் 42 முன்விடுதலை கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. இது தவிர, மேலும் 7 கோப்புகள் நீதிமன்றத் தில் உள்ளன. மொத்தமாக 49 முன்விடு தலை கோப்புகள் நிலுவையில் உள்ளன. 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனில் 4 உறுப்பி னர்கள்தான் இருக்கிறார்கள். அதற்கான ஒப்புதலையும் கேட்டுள்ளோம். இந்த கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் மனுவாக கொடுத்துள்ளார்.
முதல்வர் எல்லோருக்கும் மரி யாதை கொடுக்ககூடியவர். ஆளுநரும் முதல்வர் மீது மரியாதை வைத்திருக்கி றார். இந்த இரண்டுமே இந்த சந்திப்பில் தெளிவாகத் தெரிந்தது. இந்த சந்திப்பு சுமுகமாக இருந்தது. விடை எப்படி வரு கிறது என்பதை நீதிமன்றத்தில்தான் பார்க்க வேண்டும். சந்திப்பு சுமுகமாக அமைந்தது” என்று தெரிவித்தார்.