சென்னை, பிப். 26- அடுக்குமாடி குடியிருப்புகளை முன்னுரிமை அடிப்படையில் பிரிவில் தோட்டம், ராமதாஸ் நகர் மக்களுக்கு இல வசமாக வழங்க வேண்டும் என அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்பு குழு சார்பில் அறி விக்கப்பட்ட மறியல் போராட்டம் அதிகாரி யின் வாக்குறுதியையடுத்து ஒத்தி வைக்கப் பட்டது. ராயபுரம் 53ஆவது வட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் 900க்கும் மேற்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு 2 வருடங்களுக்கும் மேலாகிறது.
யாருக்கும் இதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த குடியிருப்புகளை அருகில் வசிக்கும் பிரிவில் தோட்டம், ராமதாஸ் நகர் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக ஒதுக்க வேண்டும் என அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த இரண்டு பகுதிகளிலும் சாதாரண ஏழை, எளிய தொழிலாளர்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் வெளி நபர்கள் 133 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதை யடுத்து மூலக்கொத்தளத்தில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு களை சம்மந்தப்பட்ட பிரிவில் தோட்டம், ராமதாஸ் நகர் மக்களுக்கு முதலில் முன்னுரிமை அடிப்படையில் எந்த ஒரு கட்டணமும் இன்றி இலவசமாக வழங்க வேண்டும்,
அதேபோல் ஜி.எச்.ஐ. பிளாக் அடுக்குமாடிகளையும் ராமதாஸ் நகர் பிரிவில் தோட்டம் மக்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் செவ்வாயன்று (பிப். 27) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் சாலை மறியல் நடத்த ஒன்று கூடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை மாநகராட்சி மண்டலம் 5இன் பொறியாளர் லாரன்ஸ் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி, சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா விடம் அழைத்துச் சென்றார்.
அப்போது நிர்வாகிகள் அவரிடம் மனு அளித்து குடி யிருப்புகளை முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் முற்றிலும் இலவசமாக குடியிருப்புகளை வழங்க வாய்ப்பில்லை என்றும், அடுத்த 10 நாட்களுக்குள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி ரூ.4.25 லட்சம் செலுத்த வேண்டும் என்பதை ரூ.1.30 லட்சமாக குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் முன்னுரிமை அடிப்படையில் இந்த பகுதி மக்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து அனைவரும் கலைந்து சென்றனர். போராட்டத்தில் டி.வெங்கட், ச.முருகேசன் (சிபிஎம்), ஜி.ஜெகன் (திமுக), கிருஷ்ணவேணி, எம்.சேகர், ஜி.பாஸ்கர் (அதிமுக), நாகராஜ் (காங்கிரஸ்), எஸ்.குமார் (பகுஜன் சமாஜ்), டி.தேவா, கமல், குட்டி (சிஐடியு), அழகுபாண்டி (வாலிபர் சங்கம்), சுரேஷ், ஏழுமலை, ராஜேஷ், குணா (ஒருங்கிணைப்பு குழு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.