tamilnadu

img

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம்!

சென்னை,டிச.12- “பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள்” என்ற தலைப்பின் கீழ்  தமிழ்நாடு மாநில மகளிர் ஆணை யம் சார்பாக சர்வதேச மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் 20 நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்ட னர். சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சமூக நலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணா நிதி, சமூகநலம் மற்றும் மகளிர்  உரிமை துறையின் அரசு முதன்மை  செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி, சமூக நல ஆணையர் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் வே. அமுதவல்லி,மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணை யத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டின் தொடக்கமாக,  தமிழ்நாடு அரசின் மகளிர் குறித்த  திட்டங்களை கனிமொழி  விளக்கம்  அளித்தார். மேலும், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய செயல் பாடுகள் மற்றும் மீட்டெடுக்கப் பட்ட கொத்தடிமை தொழிலாளர் கள் குறித்த திட்ட விளக்கப்பட கண்காட்சி திறந்து வைக்கப் பட்டது.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி  வரவேற்றார். காளிராஜ், பிரியங்கா அனூன்சியா, சிங்கப்பூர்,  கிறிஸ்டோபர் ஹாட்ஷஸ், அமெரிக்க ஐக்கிய தூதரக ஜென ரல் மற்றும் கிளைர் வில்கின்சன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

மேலும், சர்வதேச சட்ட வழி முறைகள், சட்டங்களை அமல் படுத்தும், சமூகத்தை பயன் படுத்தி குற்றங்களை குறைத்து, அரசியல் மற்றும் வழிமுறைகளை வலுப்படுத்துதல், குற்றங்களை  தடுப்பதற்கான சிறந்த நடைமுறை கள், திருநங்கையர்களை பாதிக்கும் குற்றங்கள்.

ஆன்லைன் மற்றும் சைபர்  கிரைம் குற்றங்கள். தடுப்பதற் கான வழிமுறைகள். பாலியல் கடத்தல், தடுப்பதற்கான வழி முறைகள், பாலியல் வியாபாரம். வல்லுநர்களின் கருத்துகள் பரிமாறப்பட்டது. குற்றங்களை தடுத்தல் ஆகியவை பற்றி பேசினார்கள்.

பின்னர் நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கள் எம்.எஸ்.ரமேஷ், பவானி சுப்பராயன், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. மேலும் துறையில் சிறப்பாக பணியாற்றிய பெண் களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

தேசிய அளவில், மாநில அள வில் மகளிர் அதிகாரம் அளிப்பதில் சாதனை புரிந்தவர்கள் கவுர விக்கப்பட்டனர்.