tamilnadu

img

நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நாள்? - நடிகர் சித்தார்த்

பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும் நாளே நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நாள் என்று நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தில்லி, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை 2 மடங்காக உயர்த்தி மாநிலங்களுக்கு ரூ.400க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும், மத்திய அரசுக்கு ரூ.150க்கும் விற்கப்படும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மோடி முதல்வராக இருந்த தற்போது பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்தில்  கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும் மறைக்க அம்மாநில அரசு முயற்சிப்பது குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது,
இந்நிலையில் நடிகர் சித்தார்த் பாஜக எப்போது ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படுகிறதோ, அப்போது தான் நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அர்த்தம். அந்த நாள் நிச்சயம் வரும் என விமர்சித்துள்ளார். 
 

;