tamilnadu

img

புதிய கட்டண அடிப்படையில் ஆட்டோ செயலி செயல்படுத்துக

சென்னை, மார்ச் 5 - புதிய கட்டணத்தின் அடிப்படையில் ஆட்டோ செயலியை அரசு செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற் சங்க கூட்டமைப்பு கோரியுள்ளது. ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணம் 2013ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்பு பெட்ரோல், எரிவாயு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

இருப்பினும் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. 2022ஆம் ஆண்டு வழக்கு ஒன்றைய விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தர விட்டது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை நடத்திய பேச்சுவார்த்தையில், மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைப்பதோடு, அரசே ஆட்டோ செயலியை (ஆப்) தொடங்கி நடத்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலி யுறுத்தின. இதற்காக தொடர் போராட்டங் களையும் நடத்தின.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு ஆட்டோ செயலியை தொடங்க உள்ளது. இதற்காக டாக்சினா மொபிலிட்டி நிறு வனம், தமிழ்நாடு போக்குவரத்து துறை, ஆட்டோ ஓட்டுனர் நல சங்கங்களின் கூட்ட மைப்பு ஆகியவற்றிக்கு இடையே முத்த ரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை போக்கு வரத்து ஆணையர் தொழிற்சங்கங்களுக்கு வழங்கினார். அதன் மீது பல்வேறு ஆட்சேப னைகளை அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஆட்டோ செயலி முழுமை யாக ஆட்டோ சேவைக்காக மட்டுமே பயன் படும் வகையில் இருக்க வேண்டும். ஓட்டுநர் நலவாரிய நிதியில் இருந்து இந்த செய லியை உருவாக்க வேண்டும். செயலியில் அரசு சின்னம் இடம்பெற வேண்டும். ஓட்டுநர்களிடம் பயன்பாட்டு கட்ட ணத்தை (பிளாட் ஃபார்ம்) எந்த வகையிலும் வசூலிக்க கூடாது. பயணிகளிடம் சவாரிக்கு ரூ.15 பயன்பாட்டு கட்டணம் வசூலித்து, அதில் 3ல் ஒரு பங்கு தொகையை ஓட்டுநர்களின் நலனுக்கு பயன்படுத்த வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைத்து 10 ஆண்டுகள் முடிவுற்ற நிலை யில், பழைய கட்டண விகிதத்திலேயே ஆட்டோ செயலி உருவாக்குவதை ஏற்க  முடியாது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50, அடுத்து வரும் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ. 25  என கட்டணத்தை நிர்ணயித்து, செய லியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. இது தொடர்பான மனுவை போக்கு வரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரத்திடம், அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்ட மைப்பு  தலைவர் ஐசிஎப் துரை (தொமுச). செயலாளர் எஸ்.சுப்பிரமணியம் (சிஐடியு), பொருளாளர் மு.சம்பத் (ஏஐடியுசி) உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.