tamilnadu

img

மாவட்ட புத்தகத் திருவிழாக்களிலும் தமுஎகச படைப்பாளிகளின் நூல்கள் வெளியிடப்படும்

சென்னை, ஜன. 7 - தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் நடைபெறும் புத்தகத் திரு விழாக்களிலும் தமுஎகச படைப்பாளி களின் நூல்கள் வெளியிடப்படும் என்று தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா தெரிவித்துள்ளார். சென்னைப் புத்தகக் கண்காட்சி யில் சனிக்கிழமையன்று (ஜன. 6) தமுஎகச படைப்பாளிகளின் 51 நூல்கள் வெளியிடும் விழா நடை பெற்றது

. இந்த விழாவில் நிறைவுரை யாற்றிய ஆதவன் தீட்சண்யா, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தருவதும், நூல்கள் வாங்கு வதும், சில அரங்குகளில் நடை பெறும் நூல்கள் வெளியீட்டில் பங்கேற்பதும் தமுஎகச உறுப்பினர்க ளின் அனுபவமாக இருக்கிறது.

இதி லிருந்து ஒரு முறிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு 2024 சென்னை புத்தகக் கண்காட்சியில் 100 புத்தகங்கள் வெளியிடுவது என்ற முடிவாகும். இந்த முயற்சி யின் விளைச்சல்தான் இன்று வெளி யிடப்பட்டுள்ள 51 நூல்கள். இது ஒரு தொடக்கம் என்ற முறையில் மிகப்பெரும் வெற்றிக் கொண்டாட்ட மனநிலையிலானது  இந்த நிகழ்வு என்றார். இந்த விழாவில் வெளியிடப்பட்ட நூல்களை அறிமுகம் செய்யாமல் விமர்சனம் செய்து படைப்பாளிகளை செழுமைப்படுத்த வேண்டும்.

அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர உதவ வேண்டும். சென்னை புத்தகத் திருவிழாவில் நூல்கள் வெளி யிடப்பட்ட செயல்பாட்டின் தொடர்ச்சி யாக மாவட்டம் தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களிலும் நூல்கள் வெளியிடப்படும் என்று ஆதவன் தீட்சண்யா  கூறினார்.  தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமுஎகச மூத்தத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் தொடக்க உரையாற்றினார். இந்த விழாவில் நாவல் (மின்னுவ தெல்லாம்) சிறுகதைகள் (அங்குட்டும் இங்குட்டும்) சிறார் கதைகள் (மூணு கால் முயல்) கட்டுரைகள் (காஷ்மீர் குருதியில் சிவக்கும் ஆப்பிள்) பயணக்  கட்டுரை (பொருநை முதல் நயாகரா வரை) கவிதைகள் (கிராம்சி புரண்டு படிக்கிறார்) மொழிபெயர்ப்பு (பாலைச்சுனை) ஆய்வு (யாமறிந்த புலவரிலே) நாடகம் (தபால்) சொல்ல கராதி (தகடூர் வட்டார வழக்கு) என பல வகைமைகளில் நூல்கள்  வெளியிடப்பட்டது சிறப்பம்சமாகும்.  

ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட  நூல்களையும் இந்த விழாவில் வெளியிட்டது மற்றொரு சிறப்பம்சமாகும். தமுஎகச  மாநிலப் பொருளாளர் சைதை ஜெ.  உள்ளிட்ட நிர்வாகிகளும் இந்த விழாவில் பங்கேற்றனர்.