சென்னை, பிப். 6 - “மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய் துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப் பினை அளிக்கும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டா லின் கடிதம் எழுதியுள்ளார்.
மாநில அரசுகளின் நிதி நிர்வா கத்தில் தன்னிச்சையான மற்றும் பார பட்சமான கட்டுப்பாட்டைச் செயல் படுத்தி, மாநிலங்களின் குரல்வளை யை நெரிக்க, ஒன்றிய அரசு மேற் கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முறை யீடு செய்துள்ள கேரள அரசுக்கு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளதோடு, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளது என்றும் குறிப்பி ட்டுள்ளார்.
நிதிக்கூட்டாட்சியின் அடிப்படையை சிதைக்கும் ஒன்றிய அரசு
மாநிலங்களின் பொதுச் செல வினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அர சமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதி கார வரம்பிற்கு உட்பட்டது.
இருப்பினும் மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப் பின் 293-ஆவது பிரிவின் கீழ் தனக் குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோச மடைந்துள்ளது.
இந்தப் பிரிவின்படி, ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெறவேண் டும் என்ற சரத்து, மாநில அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மை விதிகளின்படி வரை யறுக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை யை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவி யாக ஒன்றிய அரசால் மாற்றப் பட்டுள்ளது. இது அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கரு திய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படை க்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறி யுள்ளது.
தமிழ்நாட்டின் நிதி வாய்ப்பு களில் கடுமையான இழப்பு
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், ஒன்றிய அரசின் இத்த கைய நடவடிக்கைகள் மாநில அரசின் முன்முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முதலாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தொடர்ந்து 15 விழுக்காடு வளர்ச்சியை அடைந்த போதிலும் 2023-2024 ஆம் ஆண்டில் நிகரக் கடன் உச்சவரம்பைக் கணக் கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடாக ஒன்றிய அரசு நிர்ண யித்துள்ளது. இதனால், நடப்பா ண்டில் 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாவதாக, மின்துறை சீர மைப்புகளுக்காக கூடுதல் கடன் பெறுவதற்கான வழிகாட்டி நெறி முறைகளின்படி, மாநில மின் விநி யோக நிறுவனங்களின் (DIS COMs) மொத்த இழப்புக்குநிதியளிக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையால், நடப்பாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழ கத்திற்கு ரூ. 17 ஆயிரத்து 111 கோடி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு மாநிலத்தின் நிதி வாய்ப்புகளைக் கடுமை யாகக் கட்டுப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தி லும் மாநிலங்களைப் பாதிக்க வாய்ப்புள்ளது.
மூன்றாவதாக, ஒன்றிய அரசின் திட்ட மான, சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்த தால், இத்திட்டத்திற்கான மொத்த கடனான 33 ஆயிரத்து 594 கோடி ரூபாய் முழுவதும், மாநிலத்தின் நிகரக் கடன் உச்சவரம்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை
ஏற்கனவே ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில் இத்தகைய பாரபட்சமான மற்றும் அரசிய லமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில் ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது. இழப்பீட்டுத் (வருவாய் இழப்பை ஈடுகட்டும்) திட்டத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.
மாநிலங்களின் கொள்கை முன்னுரிமை களின்படி வளங்களைத் திரட்டுவதற்கும், முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி யளிப்பதற்கும் உள்ள திறனை முடக்கு வதையே ஒன்றிய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டும்.
நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாது காப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை, தான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது. இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நட வடிக்கைகளோடு, தமிழ்நாடு அரசின் முயற்சி களையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாநில சுயாட்சி முழக்கத்தை பாசிச பாஜக-வால் தடுக்க முடியாது
தில்லியில் கேரள அமைச்சரவை நடத்த வுள்ள போராட்டத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் திமுக-வும் பங்கேற்கும் என்பதையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ‘எக்ஸ்’ பக்கத்தில் பதி விட்டிருக்கும் அவர், “கூட்டுறவுக் கூட்டாட்சி யை நிலைநாட்டி, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது! உயிர்த்தீயாய்ச் சுடர்விடும் மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பாஜக-வால் ஒருபோதும் அணைத்துவிட முடியாது. நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளி லும் மாநிலங்களுடைய உரிமைகள் நிச்சயம் நிலைநாட்டப்படும். அதற்கான காலம் கனிந்துகொண்டு இருக்கிறது!” எனவும் குறிப்பிட்டுள்ளார்.