tamilnadu

img

ஆதீனத்திற்கு மிரட்டல் பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

சென்னை, ஏப்.29- மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தி டம் ரூ. 40 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த  வழக்கில், பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில், பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில், அகோரம் இரண்டாவது முறையாக தாக்கல் செய்திருந்த ஜாமீன்  மனு திங்களன்று (ஏப்.29) விசாரணைக்கு  வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்க ளையும் கேட்ட நீதிபதி, காவல்துறை தரப்பு  வாதத்தை ஏற்றுக்கொண்டு அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.