சாதி ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்டச் செயலாளர் செங்கை தமிழரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு சிறப்புரையாற்றினார்.