tamilnadu

img

சாதிய அடிப்படையில் இழைக்கப்படும் தொடர் அவமானம்

புதுதில்லி, ஜன.6- ஜனவரி 22 அன்று அயோத்தி  ராமர் கோயில் திறப்பு விழா நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இந்திய குடியர சுத் தலைவருக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று தகவல் கள் வெளியாகியுள்ளன.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும்  ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த  விழாவில் கலந்து கொள்ள நாடு முழு வதும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், தொழி லதிபர்கள், நடிகர்கள் என முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் நேரில் கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்திய குடியரசுத் தலை வர் திரௌபதி முர்முவுக்கு, இதுவரை அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,  பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்ப தாலேயே அவருக்கு அழைப்பு விடுக் கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

முன்பு ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய போதும் இதேபோன்று, குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை. அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டியல் சமூ கத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்  ஒதுக்கப்பட்டதாக அப்போது விமர்ச னங்கள் எழுந்தன. இந்நிலையில், திறப்பு விழாவிலும் சாதிய அடிப்படை யில் குடியரசுத் தலைவர் முர்மு புறக்க ணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஏற்கெனவே, நாடாளுமன்றத்திற்கு தலைவரே குடியரசுத் தலைவர்தான் என்ற நிலையில், அவரையே அழைக்  காமல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்  திறப்பு விழாவையும் மோடி அரசு நடத்தி யது குறிப்பிடத்தக்கது.