சென்னை, பிப். 8 - மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மாநில உரிமைகள் மீது தாக்குதலைத் நடத்தி வருகிறது. எதிர்க்கட்சி கள் ஆளக்கூடிய மாநிலங்களுக்கு உரிய நிதிப் பகிர்வை அளிக்க மறுப்பது, பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்க மறுப்பது, ஜி.எஸ்.டி. வரியில் உரிய பங்கீட்டை அளிக்க மறுப்பது, மாநி லங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடு வது என கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு விரோத மான நடவடிக்கைகளை கையாண்டுவருகிறது.
அதுமட்டுமின்றி, மாநில ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறை வேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கமாக செயல்பட வைப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத- எதேச்சதிகார நடவடிக்கைகளையும் ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இவற்றுக்கு எதிராக வியாழனன்று (8.2.2024) புதுதில்லியில் கேரள முதல்வர் பின
ராயி விஜயன் தலைமையில் மாநில அமைச்சர்கள், பாஜக அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், நாடாளு மன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். கேரளத்தின் இந்த உரிமைப் போராட்டத் திற்கு தமிழகத்தின் ஆதரவையும், ஒருமைப் பாட்டையும் தெரிவிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன.
இதனொரு பகுதியாக தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளும் கலந்து கொண்டு ஒன்றிய அர சுக்கு எதிராக கண்டனம் முழங்கினர்.
திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகளின் மாநிலத் தலைவர்கள், மாவட்டங்களில் செயல்படும் முக்கியத் தலைவர்கள், நிர்வாகி கள் மற்றும் மாநில அமைச்சர்கள், நாடாளு மன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
பல்லா யிரக்கணக்கோனார் கலந்து கொண்டனர். கடலூரில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தஞ்சாவூரில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ் ணன், தென்சென்னையில் சிபிஎம் மூத்த தலை வர் டி.கே. ரங்கராஜன், வடசென்னையில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், திருச்சி ராப்பள்ளியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திருவாரூரில் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.