tamilnadu

img

ஒரு முன்மாதிரி வாக்குப்பதிவு மையம்

சென்னை, ஏப். 18- தமிழகத்தில் மக்களவை தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு முன்மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த முன்மாதிரி வாக்குப்பதிவு மையங்களில் மற்ற மையங் களை காட்டிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இந்த மையங்களில் வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவதோடு, வரிசையில் நிற்பதை தவிர்க்க இருக்கைகளும் அமைக்கப் பட்டுள்ளன.மேலும் மருத்துவ முகாம், கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை, நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளும் செய்யப் பட்டுள்ளன.அந்த வகையில் மத்திய சென்னை தொகுதியில் தியாகராயநகரிலும், ஸ்ரீபெரும் புதூர் தொகுதியில் நெற்குன் றத்திலும் முன்மாதிரி வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப் பட்டிருந்தன.

;