ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மயக்கமடைந்த நிலையில் உயிரிழப்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேசிங் புரோமோஷன் நிறுவனம் சார்பில் ஃபார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய பந்தயங்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியானது 3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னைஃபார்முலா 4 கார் பந்தய சர்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது.
இந்த பந்தையத்திற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.