எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போது குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை விட்டுவிட்டு நெசவு வேலையில் ஈடுபட்டு வந்தார். பள்ளிப்படிப்பை விட்ட போதும் வாசிப்பின் மீதான ஆர்வம் காரணமாக நெசவு வேலைகளை செய்துகொண்டே பொது நூலகத்திலும் உறுப்பினராகி அங்கிருந்து நூல்களை தொடர்ந்து வாங்கிப் படித்து தனது பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்து வந்தார். வில்லாபுரத்தில் 32 குடியிருப்புகள் இருக்கக்கூடிய காம்பவுண்டில் ஒரே அறை கொண்ட வீட்டில் நெசவுக்கு போடப்பட்ட தறிக்கும் மத்தியில் தன்னுடைய மூன்று மகள்கள், கணவருடன் மிக எளிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். கொள்கைக்காக எந்தவிதமான உழைப்பையும் போராட்டத்தையும் முன்னெடுத்து உயிர் கொடுக்கவும் தயங்காத தோழர் லீலாவதி தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாணிக்கம்.
‘‘தன்னிலிருந்து ஒன்றை தருவதல்ல தானம் தன்னையே தருவதுதான் தானம்’’
- என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளை வாழ்ந்து காட்டிய தோழர் லீலாவதிக்கு வீரவணக்கம்.